• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியில் சாலையோரம் உள்ள காய்ந்த மரக்கிளைகளை அகற்ற முடிவு

March 8, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள மரங்களில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையோரம் உள்ள மரங்கள் தண்ணீர் இன்றி வறண்டு வருகின்றன. இதனால் மரக்கிளைகள் காய்ந்து அதில் உள்ள இலைகள் சாலைகளில் விழுகின்றன. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகள் அதிகரிக்கின்றன.

மேலும் சாலையில் விழும் மரக்கிளைகளால் வாகன ஒட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். சில இடங்களில் வாகனங்கள் மீதும் மரக்கிளைகள் விழும் நிலை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு காய்ந்த நிலையில் உள்ள மரக்கிளைகளை உடனே அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

சாலையோரம் காய்ந்த நிலையில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக மரங்கள் வறண்டு மரக்கிளைகள் காய்ந்து வருகின்றன. அவ்வாறு உள்ள மரக்கிளைகள் கண்டறிந்து உடனே அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது, என்றார்.

மேலும் படிக்க