• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநிலத்தில் முதலிடம் – கோவை மாவட்ட எஸ்.பி. க்கு முதல்வர் விருது!

March 10, 2022 தண்டோரா குழு

சிறந்த முறையில் இ- சேவை மேலாண்மை செயல்படுத்துவதற்காக மாநிலத்தில் முதலிடம் பெற்றதற்காக கோவை மாவட்ட எஸ்.பி. க்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.

கோவை மாவட்ட காவல்துறையின் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் செல்வநாகரத்தினம்.இவர் பொறுப்பேற்றத்தில் இருந்து கணினி மூலமாக தொடர்ந்து காவல்துறை பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இதையடுத்து,சில நாட்களுக்கு முன்பு மாநிலத்தில் இ- சேவை மேலாண்மை மூலமாக சிறப்பாக செயல்பட்டதில் தமிழகத்தில் கோவை மாவட்ட காவல்துறை முதலிடம் பிடித்தது.
இதற்கிடையில்,நேற்றிலிருந்து 4 நாட்களுக்கு சென்னையில் ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் மாநாடு சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட காவல்துறைக்கு தமிழகத்தில் முதலிடம் பிடித்ததற்காக எஸ்பி செல்வநாகரத்தினம் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் விருதுக்கான கோப்பையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் படிக்க