• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குணியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டசத்து பெட்டகங்கள் வழங்கல்

March 28, 2022 தண்டோரா குழு

கோவை குணியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டசத்து பெட்டகங்களை துணை மேயர் வெற்றிசெல்வன் வழங்கினார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 87 வது வார்டுக்கு உட்பட்ட குணியமுத்தூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தினை துணை மேயர் வெற்றி செல்வன் துவக்கி வைத்தார்.தொடர்ந்து மாணவ,மாணவிகளின் சிலம்பம் மற்றும் சுருள்வாள் ஆகிய விளையாட்டுகளை பார்வையிட்டார்.

பின்னர்,கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழாவில் பேசிய அவர்,தமிழக முதல்வரின் பெண்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும்,தமிழக முதல்வரின் மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை,நகர் நல அலுவலர் சதீஷ்குமார், மற்றும் குணியமுத்தூர் பகுதி கழக பொறுப்பாளர் லோகு, மாமன்ற உறுப்பினர்கள் உதயநிதி பாபு,செந்தில் குமார், முருகேசன், இளஞ்சேகரன்,சிவசக்தி,சுமதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க