• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிதடி- போலீசார் விசாரணை

April 1, 2022 தண்டோரா குழு

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிதடி மோதல் குறித்து போலீசார் விசாரணை – பிபிஏ துறை சார்ந்த சீனியர் மாணவரை அதே கல்லூரியில் படிக்கும் ஜுனியர் மாணவர்கள் அரை நிர்வாணமாக்கி அடித்து வெறிச்செயல்

கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் ( நேரு) கல்லூரியில் பிபிஏ துறை சார்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் ஜூனியர் பிரச்சினையின் காரணமாக அடிதடி நடந்துள்ளதாக தெரிகிறது. இதில்கேரளா மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்த மாணவனை 10க்கு மேற்பட்டவர் தாக்கி அரை நிர்வாணமாக அடித்து இழுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருதரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டபோது சீனியர்ன்னா பெரிய இவனா நீ ! இதுக்குமேலயும் அடங்கவில்லை என்றால் ஜட்டி இல்லாமல் சுத்தவிடுவோம் என மிரட்டி அடித்தனர்.பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய அடுத்து குனியமுத்தூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அடி வாங்கிய மாணவனின் ஐபோனை பறித்து சென்று மிரட்டல் அளிப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து காதல் விவகாரமா?? கல்லூரியில் ரேகிங்? விவகாரமா என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கல்லூரி மாணவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களுக்கு இடையே மோதல் பொதுவெளியில் நடைபெற்றது.

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.மேலும் அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் கதையின் நாயகன் மற்றொரு நாயகனின் உடைகளை அவிழ்த்து அரை நிர்வாணமாக அடித்து அனுப்பும் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது.அதே போன்று இந்த சம்பவமும் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க