• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நகரில் சேதம் அடைந்த சாலைகள் தொடர்பாக மாநகராட்சி வாட்ஸ் ஆப் எண்ணுக்கு 1,200 புகார்

April 19, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை பணிகள் போன்றவைகளுக்காக பல்வேறு இடங்களில் மாநகராட்சி சாலைகள் தோண்டப்பட்டு சேதமடைந்துள்ளன.

இதனிடையே கோவை மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை புகைப்படம் எடுத்து அதனை 81476 84653 என்ற மாநகராட்சியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து பொதுமக்கள் சேதமடைந்த சாலைகளை புகைப்படம் எடுத்து மாநகராட்சிக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை சுமார் 1200க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘மாநகராட்சியில் சாலை சீரமைக்க ஏற்கனவே ரூ.200 கோடி நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சாலைகளில் பேட்ஜ் ஒர்க் செய்ய முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி மாநகராட்சி சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுப்பும் சாலைகள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்

மேலும் படிக்க