• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வால்பாறையில் வேட்டை தடுப்பு காவலர்களை காட்டுயானை துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு

April 21, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் தொகுதிக்கு உட்பட்ட வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்முடி எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த புலி ஒன்றை வனத்துறையினர் வலை வீசிப் பிடித்து வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்தில் கூண்டு வைத்து புலியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் சந்திரன் மந்திரி மட்டம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வனப்பகுதி விட்டு வெளியே வந்த ஒற்றை காட்டு யானை மூன்றுபேரை துரத்தியது இதில் மூன்று பேரும் திசைமாறி சென்றுள்ளனர். காட்டின் குறுக்கு பகுதியில் சென்ற சந்திரன் மரத்தின் வேர் காலில் பட்டு நெஞ்சில் அடிபட்டது.

சந்திரனை தேடிவந்த நண்பர்கள் சந்திரனை தூக்கிக்கொண்டு வனப்பகுதி விட்டு வெளியே வந்து வால்பாறை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.காட்டு யானை துரத்தி வேட்டை தடுப்பு காவலர் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க