April 23, 2022
தண்டோரா குழு
மாநகராட்சியில் வார்டுக்கு ஒருவர் வீதம், 100 வரி வசூலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், 54 பேர் கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.இவர்களில் 21 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த 21 பேரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களில் 21 நபர்களுக்கு தற்போது வரி வசூலிக்கும் அலுவலர்களாக பணி நியமனம் வழங்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
அவர்களுக்கு வழங்கிய பணி நியமனத்தை திரும்ப பெறக் கோரிய வழக்கு, சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால், 21 நபர்களை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.