April 26, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கூறியிருப்பதாவது:
கொரோனா தற்போது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆகையால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.
இவ்வாறு மேயர் கூறியுள்ளார்.