• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை பதிவேற்றுவதில் சிக்கல்

May 6, 2022 தண்டோரா குழு

கோவை போத்தனூர் ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சான்று பெற முடியாமல் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி அவசியம் செலுத்த வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், போத்தனூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தினமும் 20க்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே குறிச்சியில் இருந்து போத்தனூர் வரை குடிநீர் பைப் மற்றும் கேபிள் பதிப்பதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஆரம்ப சுகாதார மையத்தில் இணைய சேவை தடைபட்டுள்ளது. இதனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான சான்றுகள் பெற முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

இது குறித்து அங்கு தடுப்பூசி செலுத்த வருபவர்கள் கூறுகையில்,

‘‘தடுப்பூசி செலுத்திய பின்னரும் அதற்கான சான்று கிடைப்பதில்லை. இணையத்தில் பதிவேற்ற முடியாததால் சான்று கிடைக்க தாமதமாகலாம் என்று தெரிவிக்கின்றனர். போத்தனூர் சாலையில் கேபிள்கள் பதிக்கும் பணி எப்போது முடியும் என்று தெரியாது. எனவே தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உடனே மக்களுக்கு கிடைப்பதற்கு அதிகாரிகள் வழிவகை செய்யவேண்டும்’’ என்றனர்.

மேலும் படிக்க