• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்

May 18, 2022 தண்டோரா குழு

கல்லூரி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோவை டாக்டர் எஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் எஸ்.என்.எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கல்லூரிகளுக்கிடையே மிராரி – 22 எனும் தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன.கல்லூரியின் தாளாளர்
மருத்துவர் எஸ்.இராஜலட்சுமி, தலைவர் முனைவர் எஸ்.என் சுப்பிரமணியன், செயலர் முனைவர் எஸ்.நளின் விமல் குமார், முதன்மை அதிகாரி முனைவர் டேனியல், முதல்வர் முனைவர் அனிதா, துணை முதல்வர் முனைவர் நரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்த இந்த போட்டியில் நடனம், ஓவியம்,பாட்டு , ஆடை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் கோவை,திருப்பூர் என 90க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இதில் உணவு மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சிகளும் நடைபெற்றன. நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க