• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானது பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

May 20, 2022 தண்டோரா குழு

உதயநிதி ஸ்டாலின் நடித்த,நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, கோவை மாநகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக, பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

பிரபல நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து,அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி..ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோ தயாரிப்பில்,ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே திரையரங்குகளில் நெஞ்சுக்கு நீதி இன்று வெளியானது.கோவை இரயில் நிலையம் சாந்தி திரையரங்கில் படம் வெளியானதை தொடர்ந்து கோவை மாவட்டம் மற்றும் மாநகர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர்.

மாவட்ட தலைவர் இருகூர் பூபதி தலைமையில் நடைபெற்ற இதில்,மாவட்ட செயலாளரும்,87 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் ஆன உதயநிதி பாபு,மாநகர தலைவர் டேவிட் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக கோவை வ.ஊ.சி.மைதான வளாகத்தில் மேள தாளங்களுடன் இரு சக்கர வாகனத்தில் ரசிகர்கள் ஊர்வலமாக படம் வெளியாகிய சாந்தி திரையரங்கற்கு வந்தனர்.

தொடர்ந்து ரசிகர், ரசிகைகள் தங்களது அபிமான நடிகர் நடித்து படம் வெளியானதை கொண்டாடும் விதமாக நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்இந்நிகழ்ச்சியில் மாநகர பொறுப்பாளர் ராகுல் ராம் மற்றும் நிர்வாகிகள் வினோத், முனிப்பாண்டி, செந்தில், அப்பாஸ், சுல்தான்,செல்லா,டேவிட் பீட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க