• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வடவள்ளி ஆனந்தாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 40 குழுவினருடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

May 28, 2022 தண்டோரா குழு

புகழ்பெற்ற ஆனந்தாஸ் உணவகத்தின் கிளையில், கோவை வடவள்ளி, லட்சுமி மில்ஸ், சுந்தராபுரம், ராம்நகர், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் அடிப்படையில் இன்று காலை 6 மணி முதல் 40 குழுவினருடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் உணவகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆனந்தாஸ் உரிமையாளர் மணிகண்டன் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.முன்னதாக வடவள்ளியில் உள்ள ஆனந்தாஸ் உணவகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்ற போது,அங்கிருந்த நிர்வாகத்தினர் அடையாள அட்டை கேட்டு வெளியே நிற்க வைத்ததாகவும், உள்ளூர் போலீசாருக்கும் தகவல் அளித்தாக தெரிகிறது.

இதையடுத்து போலீசார் வந்த பிறகே வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க