• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘போலீஸ்கிட்ட சொல்லுவியா அப்ப இந்த வாங்கிக்கோ கத்திக்குத்து’

June 17, 2022 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் அருகே சொக்கம்புதூரில் வசித்து வருபவர் அகிலபிரியன் (29). பெயிண்டர்.இவர் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது அகிலபிரியன் வீட்டிற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த போது பிரவீன் குமார் என்கிற தென்னாலி என்பவர் குடிபோதையில் அகிலபிரியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து அகிலபிரியன் காவல் நிலையம் சென்று புகார் அளிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே அகிலபிரியனின் நண்பர் வினோத் என்பவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் பிரவின்குமார் என்கிற தென்னாலி காவல்நிலையம் சென்று என் மீது புகார் அளிப்பாயா? எனக்கூறி தான் வைத்திருந்த கத்தி மூலம் அகிலபிரியன் மற்றும் வினோத் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

அருகில் உள்ளவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக செல்வபுரம் போலீசார் அகிலபிரியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க