• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களிடம் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் கலந்துரையாடல்

June 29, 2022 தண்டோரா குழு

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன், மாநகரில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விபத்துகள் குறித்து கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர்,

சாலை விபத்துகளே இல்லாத மாநகராக கோவையை கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருதாக கூறினார்.பள்ளி மாணவர்களிடம் இருசக்கர வாகனங்களை தர வேண்டாம் எனவும் லைசன்ஸ் இல்லாமல் அவர்கள் வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீதும் வாகனத்தை தந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

பெட்ரோல் பங்க்களிலும் ஹெல்மெட் அணியாமல் வந்தாலும் சீட் பெல்ட் அணியாமல் வந்தாலும் அங்குள்ள சிசிடிவி களை ஆராய்ந்து வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் கூறினார். மேலும் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சவாரி அழைத்து செல்லும் போது ஒரு சிலர் தவறாக உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதாக புகார்கள் வருவதாகவும் இது போன்று இன்னொரு முறை புகார்கள் வராத வண்ணம் பார்த்து கொள்ளுமாறு கூறினார்.

இதில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அவர்களுக்குள்ள சிக்கல்களையும் தேவைகளையும் முன்வைத்தனர்.

மேலும் படிக்க