July 18, 2022
தண்டோரா குழு
பொள்ளாச்சி அருகே உள்ள வடுக பாளையத்தில் ஆலமரத்தம்மன் கோவில் நூறு வருடங்களுக்கு மேல் பழமையான கோவிலாகும், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வருடம் தோறும் பூவோடு எடுத்தும் கார்த்திகை மாதம் கோவில் முன்பு உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை தீபம் ஏற்றி ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி வழிபாடு செய்து வருகின்றனர்.
இதை அடுத்து கோவில் அர்ச்சகர் சிறப்பு அபிஷேகம் செய்து ஆலமரத்தில் தீபம் காண்பிக்கும் பொழுது மரத்தின் மேல் இருந்து பால் வடிந்தது,தகவல் அறிந்த பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் ஆலமரத்தை வழிபாடு செய்தனர்,ஆலமரத்தில் பால் வடியும் காட்சி அப்பகுதிகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.