தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ.
முருங்கைக்காய் – 4.
வெங்காயம் – 200 கிராம்.
பச்சை மிளகாய் – 4.
இஞ்சி, பூண்டு – 1 டீ ஸ்பூன் (விழுதாக்கியது).
சீரகம் – 1 டீ ஸ்பூன்.
மிளகுத் தூள் – 4 டீ ஸ்பூன்.
மிளகாய் வற்றல் – 6.
கொத்தமல்லி இலை – 1 கப்.
மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.
எண்ணை – 1 குழிக்கரண்டி.
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முருங்கைக் காயையும் துண்டுகளாக்கவும். ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி, சிறிது நீர் சேர்க்கவும்.இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து சிக்கனையும் அதில் போட்டு மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது