• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாசி நிறுவன வழக்கில் 2 பேருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை ரூ.171 கோடி 74 லட்சத்து 50 ஆயிரம் அபராதம்

August 26, 2022 தண்டோரா குழு

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தது. இந்த வழக்கில் பாசி நிதி நிறுவன இயக்குனர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ், கதிரவன் ஆகியோரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் 2013 ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் வழக்கு விசாரணையானது நடத்தப்பட்டது. மொத்தம் 1402 சாட்சிகளிடம் விசாரணையானது நடத்தப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது கதிரவன் உயிரிழந்து விட்ட நிலையில் பாசி நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலவல்லி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆஜராகினர்.

இந்த வழக்கில் தீரப்பளித்த நீதிபதி ரவி , கமலவள்ளி மோகன்ராஜ் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.நிதி நிறுவன இயக்குனர்கள் இருவருக்கும் 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்த நீதிபதி, 171 .74 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.மேலும் வழக்கை முழுமையாக விசாரிக்காத சிபிஐக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.171.74 கோடி அபராத தொகையினை சாட்சியம் அளித்த 1402 பேருக்கு பிரித்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி ரவி உத்திரவிட்டார்.

மேலும் பாசி நிதி நிறுவனத்தால் 58571 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 930 கோடி மோசடி எனவும் என சிபிஐ குற்றபத்திரிகை செய்துள்ள நிலையில் 1402 பேரை மட்டும் ஆஜர்படுத்தி விட்டு மற்றவர்களை ஆஜர்படுத்தாததற்கு சிபிஐக்கு நீதிபதி ரவி கண்டனம் தெரிவித்தார்.இந்த வழக்கில் இனிமேல் பாதிக்க பட்டவர்கள் புகார் கொடுத்தால் சிபிஐ மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களை தவிர்க்க கூடாது எனவும் நீதிபதி ரவி தனது தெரிவித்தார்.

மேலும் படிக்க