• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆனைகட்டி பனப்பள்ளியில் தேடப்பட்ட ஆண் யானை தென்பட்டது

August 30, 2022 தண்டோரா குழு

கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையை சில நாட்களாக தேடி வந்த நிலையில், ஆனைகட்டி பனப்பள்ளி அருகே யானை தென்பட்டது என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம், ஆனைகட்டி வடக்கு பீட், சீங்குளி பழங்குடியின கிராமம் அருகே, கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் இரு மாநிலங்களுக்கு இடையான எல்லைப்பகுதியில் ஆண் யானை ஒன்று கடந்த 15-ம் தேதி தென்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடல் நலம் குறித்து கண்காணிக்க துவங்கினர். யானை உடல் மெலிந்து காணப்பட்டது.

யானை கண்காணிப்பு பணியில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக ஊழியர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த ஊழியர்கள் குழுவாக ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை கேரளா மாநிலம் அட்டப்பாடி சரகத்தின் கீழ் உள்ள தாசனூர் மேடு பகுதிக்கு சென்றது. இதையடுத்து, கேரள வன அலுவலர்களுடன் தகவல்களை பகிர்ந்து கோவை வன ஊழியர்கள் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். யானையை கண்டறிய டிரோன் கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், யானையை கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து, யானை தேடும் பணியில் தமிழக, கேரள வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, அன்மையில் ஆனைகட்டி பகுதியில் உள்ள செங்குட்டை பகுதியில் யானை இருப்பது உறுதி செய்யப்பட்டது. யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், யானை செங்குட்டையில் இருந்து வேறு பகுதிக்கு சென்றுள்ளது. இதனால், யானை கண்டறிய வனத்துறையினர் தனி தனி குழுவாக பிரிந்து வனத்திற்குள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

யானைக்கு பழங்களில் மாத்திரை, மருந்து வைத்து அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், யானையை பிடித்து சிகிச்சை அளிக்க பொள்ளாச்சி டாப்சிப் பகுதியில் இருந்து கும்கி யானை கலீம், முத்து கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், முத்து, பொள்ளாச்சி பகுதியில் பிடிப்பட்ட அரிசி ராஜா என்ற யானை ஆகும். இந்த யானை கும்கியாக மாற்றப்பட்டு தற்போதுதான் முதல் முறையாக யானை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று தேடப்பட்ட வந்த ஆண் யானை ஆனைகட்டி பனப்பள்ளி பகுதியில் தென்பட்டது. தொடர்ந்து யானையை கண்காணித்த வனத்துறையினர் யானையின் வழித்தடத்தில் கிடைத்த சானியை சோதனை செய்தனர். அதில் வந்த முடிவுகளின்படி யானை ஆரோக்கியமாக உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து யானை கண்காணிப்பில் உள்ளது எனவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க