• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

5000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி அளித்து உலக சாதனை

September 10, 2022 தண்டோரா குழு

இன்று உலக முதலுதவி முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என் ஜி ஓ இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் அரசினர் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள், அண்ணா பல்கலைக்கழகம் மாணவ மாணவிகள்,குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள்,குமரகுரு பள்ளி மாணவ மாணவிகள்,குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் என 49 பள்ளி கல்லூரிகளில் இருந்து 5386 மாணவ மாணவிகளுக்கு மயக்கத்தில் இருப்பவரை உடனடியாக மீட்டு வருவதற்கான அடிப்படை முதல் உதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.

இதனை ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் பதிவு செய்து விருது வழங்கியுள்ளனர்.மேலும் இதில் போதைபொருளுக்கு எதிரான உறுதி மொழியை, எடுத்தனர்.இந்நிகழ்விற்கு மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகள், தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இது கோவை மாவட்டத்தை பொருத்தவரை மிக பெரிய சாதனையாக கருதப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இந்நிகழ்வு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அலெர்ட் என் ஜி ஓ நிர்வாகிகள் வேளாண் பல்கலைக்கழக அலுவலகர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க