• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காரமடை கண்ணார்பாளையத்தில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம் சூறை

September 14, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கண்ணார்பாளையம் நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்று இன்று திறக்க உள்ளார். அதற்கான பணிகளில் நேற்று தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று ஹோட்டல் உரிமையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கடையை அடித்து நொறுக்கியும் உள்ளனர்.கடையின் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்த அருண்”(21) என்பவரையும் தாக்கியுள்ளனர்.இதனையடுத்து கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது.

இச்சம்பவத்தில் அருண் என்பவர் படுகாயமடைந்து காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கடையின் உரிமையாளர் பிரபாகரனுக்கும் காயமேற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவத்தால் காரமடையில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க