• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஸ்வபிரம்மா ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்

September 17, 2022 தண்டோரா குழு

விஸ்வபிரம்மா ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கோவை மாவட்ட விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பு ஐங்குலத்தோர் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பு ஐங்குலத்தோர் சார்பாக ஸ்ரீ விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா கோவில்மேடு பகுதியில் நடைபெற்றது.கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.சிவராமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக புளியமரம் திடலில் விஸ்வபிரம்மா கொடியேற்றி, படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பு ஐங்குலத்தோர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஸ்வபிரம்மா ஐங்குலத்தோர் சார்பாக ஏழை எளிய அனைத்து சமுதாய மக்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை,சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பின் ஐங்குலத்தோர் தலைவர் சிவராமன் கூறுகையில்,

விஸ்வபிரம்மா ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்,எங்களது சமுதாய மக்களுக்கு அரசு வேலை,இட ஒதுக்கீடு,அரசு நலத்திட்டங்கள், உள்ளிட்டவை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க