• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சி. எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரியில் உளவியல் கல்வி எனும் தலைப்பில் கருத்தரங்கம்

October 12, 2022 தண்டோரா குழு

உலக மன நல தினத்தை முன்னிட்டு,கோவை சி. எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியல் கல்வி எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 மற்றும் 11 தேதிகளில் உலக மன நல தினம் கடைபிடிக்கபடுகிறது.இது குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக,கோவை பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கல்லூரியின் தலைவர் பேராயர் திமோத்தி ரவீந்தர் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இதில்,முன்னதாக சமூகப்பணித் துறை சார்பாக எம்.சி.ஏ அரங்கில்,மனித உளவியல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

“உளவியல் கல்வி” என்ற தலைப்பில் நடைபெற்ற இதில்,முதன்மை விருந்தினராக, மருத்துவ உளவியலாளர்,ரவி வர்மன், கலந்து கொண்டு பேசினார்.கல்லூரியின் செயலாளர் ஆயர்.டேவிட் பர்னபாஸ்,முதல்வர் டாக்டர்.ஜெமிமா வின்ஸ்டன், துறைத்தலைவர் .சாம் லவ்லிசன், நிகழ்ச்சிப் பொறுப்பாளர் டாக்டர்.பிரியதர்ஷினி மற்றும் சமூகப் பணித் துறையின் அனைத்து ஆசிரிய, மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை சித்தரிக்கும் விளக்கப்படங்களைக் காண்பிக்கும் வகையில், ‘மனநலப் பொருட்காட்சி 2022’ கண்காட்சியும் உளவியல் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதன் விளைவுகள்” என்ற தலைப்பில் சமூக சேவகர் கனகராஜ் பேச உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க