• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

October 26, 2022 தண்டோரா குழு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 23ம் தேதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை கடந்த 24ம் தேதி இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல் விடுத்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ராஜசேகர் உததரவிட்டார். போலீஸ் தரப்பில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் 3 நாட்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க