• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு 36 மருத்துவ குழுக்கள் அமைப்பு

November 10, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையாக 36 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஊரகப் பகுதிகளில் தினசரி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் நாள்தோறும் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பெரியளவில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. உயிரிழப்பும் இதுவரை ஏற்படவில்லை.

பருவமழை தீவிரமாகும் போது காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 12 வட்டாரங்களுக்கும் சேர்த்து 36 சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்கள் தேவைப்படும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளில் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க