• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 1120 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

December 7, 2022 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக, கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சூலூர், பன்னீர்மடை கிழக்கு, செல்வபுரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 1120 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். இதனை அடுத்து பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் செல்வபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் ரூ.46.44 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள், சூலூர் பகுதி –3 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.41.88 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள்,பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.5.44 கோடி செலவில் 64 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு என மொத்தம் ரூ.93.76 கோடி மதிப்பீட்டில் 1120 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும்,மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உட்பட 30 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகான ஒதுக்கீட்டு ஆணைகளையும் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக்கேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க