• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை அளிக்கத் தயார் – அப்பல்லோ மருத்துவமனை

January 9, 2017 தண்டோரா குழு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை அளிக்கத் தயார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2015 செப்டம்பர் 23 ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்பல்லோவில் தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்தும் அவரது மரணம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இதையெடுத்து, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கும், சென்னை அப்பல்லோ நிர்வாகத்துக்கும் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆஜாரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரத்தை சீலிடப்பட்ட உறையில் அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

எனினும், மத்திய, மாநில அரசுகள் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப் பட்டதால் வழக்கு விசாரணை பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் பதிலைப் பொறுத்து மருத்துவமனையின் அறிக்கையை வெளிப்படையாக வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும் படிக்க