• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

21 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் : ரூ.11 ஆயிரம் அபராதம் வசூல்

December 22, 2022 தண்டோரா குழு

கோவை ராஜவீதியில் 21 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும்,தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையைத் தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதில், பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை மற்றும் தயாரிப்பு உறுதி செய்யப்பட்டால், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் கோவை 81ஆவது வார்டு, ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரி, சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட 42 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.இதில், 21 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் படிக்க