• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய மண்டலப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

December 28, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.

இதையடுத்து மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய மண்டலம் மாநகராட்சி உதவி கமிஷனர் மகஷே் தலைமையில் உதவி நகர திட்டமைப்பு அலுவலர் பாபு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 3 பெட்டிக்கடைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஆவின் கடை உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க