• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாலையை ஆக்கிரமித்திருந்த அதிமுக, கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் உள்பட 45 கட்டடங்கள் இடித்து அகற்றம்

December 29, 2022 தண்டோரா குழு

கோவை கிழக்கு மண்டலத்தில் சாலையை ஆக்கிரமித்திருந்த அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட 45 கட்டடங்கள்
அகற்றப்பட்டன.

கோவை மாநகராட்சியில் பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பு, சாலைகள் ஆக்கிரமிப்பு மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், மாநகரில் ஆக்கிரமிப்புப் பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் குழு அமைத்துள்ளார். இக்குழுவினர், 5 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கிழக்கு மண்டலம் எஸ்.ஐ.ஹெச். எஸ் காலனி 55 ஆவது வார்டு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீடுகள், வணிகக் கட்டடங்கள், கட்சி அலுவலகங்களை காலி செய்ய கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், கட்டடங்களை காலி செய்ய ஒரு மாதம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் குழுவினர் புதன்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்து அகற்றினர்.

இதில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம், அதிமுக அலுவலகம், ஹெச்.எம்.எஸ். தொழிற்சங்க அலுவலகம் மற்றும் கடைகள் உள்பட 45 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடத்துக்காக காத்திருப்பதால், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 12 வீடுகள் மட்டும் இடிக்கப்படவில்லை.

இதேபோல், மத்திய மண்டலம் 66ஆவது வார்டுக்கு உள்பட்ட சிவானந்தா காலனி புதுப்பாலம் அருகில் உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையிலான குழுவினர், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக, 5க்குமே மேற்பட்ட சாலையோரக் கடைகள், கட்டடங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றினர்.

மேலும் படிக்க