• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய கொள்ளையர்கள் 9 பேர் கைது

January 14, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி இரவு கோவில்பாளையம் பகுதிகளிலும், 10ம் தேதி இரவு கருமத்தம்பட்டி பகுதியிலும் வடமாநிலத்தவர் தங்கியிருந்த பகுதிகளில் சில கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வடமாநிலத்தவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் சில பொருட்களை திருடி சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்யராஜ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தும், பழங்குற்றவாளிகள் மற்றும் செயல்முறை குற்றவாளிகளின் பட்டியல் சோதனை செய்யப்பட்டது.

இதில் கூட்டுக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் வஞ்சிநாதன் (19), மணிராஜ் என்பவரது மகன் விஜய் ராஜ்(22), தனபால் என்பவரது மகன் ரோகித் (20), பொன்னையா எனபவரது மகன் திரேஷன் (எ) சூர்யா (23), சின்ராஜ் மகன் சீனு (எ) திருமலை (23), மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் (20) மற்றும் 3 இளஞ்சிறார்கள் உட்பட 9 நபர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள், கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கும், இளஞ்சிரார்களை கூர்நோக்கு இல்லத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க