• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 1.63 லட்சம் பேரிடம் ரூ.11.33 கோடி அபராதம் வசூல்

January 17, 2023 தண்டோரா குழு

முறையான டிக்கெட் இல்லாமல் பயணம், அனுமதியை மீறிய பயணம் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறியிருப்பதாவது:

முறைகேடுகளை தவிர்க்க டிக்கெட் பரிசோதகர் குழுவினர் அவ்வப்போது ரயில்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது முறையான டிக்கெட் இல்லாமல் பயணம், அனுமதியை மீறிய பயணம் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இதன்படி, கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 1.63 லட்சம் பேரிடம் ரூ.11.33 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே போன்று வசூலிக்கப்பட்ட அபராத தொகையைவிட இது 61.18 சதவீதம் அதிகம் ஆகும்.

மேலும் அனுமதியை மீறி பயணித்த 17,770 பேரிடமிருந்து ரூ.89.76 லட்சமும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகப்படியான லக்கேஜ் எடுத்துவந்த மற்றும் லக்கேஜ் முன்பதிவு செய்யாத 432 பேரிடம் இருந்து ரூ.2.74 லட்சமும் அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க