• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘ஒரு நாள் – மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர்’ கல்லூரி மாணவர்களுக்கான தனித்துவமான போட்டியின் விருது வழங்கும் விழா

January 27, 2023 தண்டோரா குழு

சங்கர் ஐஏஎஸ் அகாடமி மற்றும் யங் இண்டியன்ஸ் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான ‘ஒரு நாள் – மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர்’ என்ற தனித்துவமான போட்டியை சமீபத்தில் கோவை விழாவின் 15வது பதிப்பின் போது தொடங்கியது.

இந்தப் போட்டியில் பதிவு செய்து பங்கேற்கும் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை, மின் ஆளுமை, போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்பு, விபத்தில்லா சாலைகள், சைபர் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் தொடர்பான மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் மாநகராட்சியால் கண்டறியப்பட்ட சிக்கல் அறிக்கைகள் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் மாணவர்கள் வழங்கப்பட்டுள்ள சிக்கல் அறிக்கைகளுக்கு அவர்களின் புதுமையான தீர்வுகளை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதில் வெற்றியாளர்கள் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையருடன் ஒரு நாள் செலவிடுவார்கள், மேலும் வெற்றி பெறுபவர்கள் அனைவருக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் 100% உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்,கோவை மாநகர காவல்துறை ஆனையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

மேலும் படிக்க