• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கியூப்களில் ரோபாட் உருவம் வரைந்து 9 வயது பள்ளி மாணவி அசத்தல்

March 25, 2023 தண்டோரா குழு

கோவை துடியலூர் அருகே அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஹன்சிதா (வயது 9). இவர் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குருமூர்த்தி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். தாய் சுபாஷினி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.

ஹன்சிதாவிற்கு சிறு வயதில் இருந்தே கியூப் விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதை வைத்து விநாயகர் உருவம், மகாத்மா காந்தி உருவம் போன்றவற்றை வரைந்துள்ளார். இதனிடையே கோவையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு பிரிவு சார்பாக ஹைபாட் என்னும் ரோபாட் தொடர்பான நிகழ்வு ஒன்று நேற்று நடந்தது. இதில் ஹன்சிதா கலந்து கொண்டு 272 கியூப்களில் ரோபாட் உருவம் வரைந்து அசத்தியுள்ளனர். இதனை கல்லூரி மாணவர்களை, பேராசிரியர்கள் வியப்புடன் பார்த்தனர்.

மேலும் படிக்க