• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 5 மாதம் கர்ப்பமான கல்லூரி மாணவி உயிரிழப்பு

April 4, 2023 தண்டோரா குழு

கோவையில் கடுமையான வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவி பலியானார். பரிசோதனையில் அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி.இவர் சரவணம்பட்டியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎட் படித்து வந்தார். இந்நிலையில்,கடந்த சில நாட்களாக அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இதையடுத்து அவர் தனது தோழி ஒருவரை அழைத்து கொண்டு ஆட்டோவில் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரது நாடித்துடிப்பு மிகவும் குறைவாக இருந்துள்ளது.இதனால் டாக்டர்களின் பரிந்துரையின்படி மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.மேலும் உயிரிழந்த மாணவி 5 மாத கர்ப்பிணியாக இருந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது.இது தொடர்பாக அவரது பெற்றோருக்கும்,சரவணம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க