• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதானியை பற்றி மக்களவையில் கேள்வி கேட்டதால் ராகுல்காந்தி குறி வைக்கப்படுகிறார்

April 8, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அழகு ஜெயபால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பிரதமர் மோடி அதானிக்காக ஜனநாயகத்தை அழிக்க தயாராகி விட்டதாகவும் அதானியை பற்றி மக்களவையில் கேள்வி கேட்டதால் ராகுல்காந்தி குறி வைக்கப்படுகிறார் எனவும் தெரிவித்தார். மேலும் பிப்ரவரி 7ஆம் தேதி மக்களவையில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளை பட்டியலிட்டார்.அதனைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்தது குறித்து பேசிய அவர், சூரத் நீதிமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்ற மேஜிஸ்ட்ரேட் வருமா முன்னிலையில் விசாரணை விரைவாக நடக்க தொடங்கி 24 நாட்களில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு அவசர அவசரமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது எனவும், தீர்ப்பு வழங்கிய 24 மணி நேரத்தில் மக்களவை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டு பின்னர் தங்கி இருந்த வீட்டை விட்டு வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது எல்லாம் அப்பட்டமான பழிவாங்கும் போக்கு என தெரிவித்தார்.

மேலும் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பேசியதற்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் எந்த அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது? என கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி குடியிருப்பது தலைநகர் டெல்லியில் என தெரிவித்த அவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கை அரங்கேறியுள்ளதாக விமர்சித்தார். மேலும் மூன்று ஆண்டுகள் கிடப்பிலிருந்த வழக்கு 24 நாட்களில் விசாரிக்கப்பட்டு அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கியது ஏன்? வழக்கு தொடுத்தவரே வழக்கிற்கு எதிராக ஓராண்டு தடை பெற்று திரும்ப அவசர அவசரமாக விலக்கிக் கொண்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றப்பட்டு புதிய நீதிபதி பொறுப்பேற்றார் எனவும் தெரிவித்தார். இத்தகைய சர்வாதிகார பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வழிகாட்டுதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீவிரமான பரப்புரை மூலம் மக்கள் ஆதரவை திரட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க