• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல் இனவிருத்தி ஆராய்ச்சியாளர் இராமையாவுக்கு இருக்கை உருவாக்கம்

April 13, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல் இனவிருத்தி ஆராய்ச்சியாளர் இராமையா இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் நெல் ஆராய்ச்சி நிலையமான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நெல் இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம் 1912 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகப் புகழ்பெற்ற நெல் ஆராய்ச்சியாளரான டாக்டர் கே. இராமையா இந்த நிலையத்தில் 24 ஆண்டுகள் (1914-1938) சேவையாற்றியுள்ளார். பன்முகத்திறன் கொண்ட டாக்டர் இராமையா வேளாண் ஆராய்ச்சியாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார்.

மேலும் இவர் ஒடிசா மாநில கட்டக்கில் உள்ள தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் இந்தியாவின் நெல் கலப்பின இனப்பெருக்க ஆராய்ச்சியின் முன்னோடியாவார். இவரது முனைப்பான ஆராய்ச்சியின் மூலம் மசூரி மளிஞ்சா (மலேசியா ரகங்கள்), ஏ.டீடி 27 (இந்தியா) மற்றும் சிர்க்னா (சீனா) போன்ற உயர் விளைச்சல் ரகங்கள் உருவாக்கப்பட்டன. இவரால் கண்டறியப்பட்ட ஜ இ பி 24 (கிச்சிலி சம்பா) ரகம், உலகம் முழுவதும் சுமார் 83 புதிய ரகங்களின் உருவாக்கத்திற்கு முன்னோடியாக விளங்கியது.

இந்தியா அரசாங்கம் இவருக்கு பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் வழங்கியுள்ளது. மூலம் இவரது சேவையை கௌரவித்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் டாக்டர். இராமையா நினைவாக பயிர் மரபணு வளங்களின் களஞ்சியமாக ராமையா மரபணு வங்கியை 2009ம் ஆண்டு உருவாக்கியது. மேலும் நெல் இனவிருத்தி நிலையத்தில் இவரது திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுதல் என்ற கனவை கொண்டிருந்தார் இராமையா. டாக்டர். இராமையாவின் கனவை நினைவாக்கும் வகையில் அவரது மகன் பஞ்சரத்தினம் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இராமையா இருக்கையை உருவாக்குவதற்காக ரூ.5 கோடியை வழங்கியுள்ளனர். இதன் படி இராமையா இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தொகையானது பல்கலைக்கழகத்தின் நிதிய மூலதனமாக பராமரிக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியானது ஆராய்ச்சி நிதியாக பயன்படுத்தப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், டாக்டர். வெ. கீதாலெட்சுமி இந்த நன்கொடையை வழங்கிய டாக்டர் ராமையாவின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க