• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடைபாதையில் சிறியளவில் கடை போட அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

April 17, 2023 தண்டோரா குழு

நடைபாதையில் சிறியளவில் கடை போட அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்த திராவிட சாலையோர நடைபாதை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர்.

கோவை காந்திபுரம் 8 ஆவது வீதி சீனிவாச புரத்தில் மார்கெட் செயல்பட்டு வருகிறது. மார்க்கெட் நடைபாதை ஓரமாக , போக்குவரத்துக்கும்,பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் 20 க்கும் மேற்பட்டவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.40 நாட்களுக்கு முன்பு கமர்சியல் கோர்ட் வருவதால் எட்டு நாட்களுக்கு மட்டும் நடைபாதையில் வியாபாரம் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் கேட்டனர். அதன்பேரில் நாங்கள் கடை போடவில்லை.

இதனையடுத்து மீண்டும் கடை போட கேட்ட போது,மாநகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் அனுமதி அளிக்கவில்லை. மூன்று முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த 45 ஆண்டுகளாக நடைபாதையில் சிறு வியாபாரம் செய்து வருகிறோம். கடை நடத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க