• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

April 29, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பரமசிவம் வசித்து வருகிறார். கடந்த பிப்.23ம் தேதி முத்துக்குமார் (33) என்பவர் பரமசிவம் வீட்டிற்கு வந்து தான் சோலார் மின்சாரம் சரி செய்வதாகவும், அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட லைன் இன்ஸ்பெக்டர் எனக் கூறியுள்ளார்.

அதன் பின் சோலார் மின்சாரத்தை சரிபார்பது போல் நடித்து பரமசிவம் வீட்டிலிருந்த 9 பவுன் நகைகளை முத்துக்குமார் திருடி சென்றுள்ளார். இது சம்பந்தமாக சூலூர் காவல் நிலையத்தில் பரமசிவம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து முத்துக்குமாரை இன்று போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் போலீஸார் விசாரணையில் முத்துக்குமார் பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சூலூர், அன்னூர், கோவில்பாளையம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 7 வீடுகளில் இவர் திருடி உள்ளார். திருடிய 30 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” என்றனர்.

மேலும் படிக்க