• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொள்ளையர்கள் இருவர் கைது : 8 பவுன் நகை மீட்பு

May 9, 2023 தண்டோரா குழு

கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் அன்பு.இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் மருதமலை தேவஸ்தானம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் கடந்த 23.3.23 அன்று வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் பள்ளியில் இருந்து மாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆசிரியை வீட்டில் நகை திருடியதாக ஒண்டிபுதூரை சேர்ந்த பிரகாஷ் (33), அன்னூரை சேர்ந்த பிரகாஷ் (26) ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று மாலை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீஸார் விசாரணையில், “கைதான கொள்ளையர்கள் மீது வழக்குகள் உள்ளன. மேலும் அவர்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து உயர்ரக பார்களுக்கு சென்று மிகவும் காஸ்டிலியான மது வகைகளை அருந்துவதும் வழக்கமாக கொண்டுள்ளனர், ” என தெரியவந்தது.

மேலும் படிக்க