• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் தலசீமியா பாதித்த 23 குழந்தைகளுக்கு சிகிச்சை டீன் தகவல்

May 12, 2023 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் தலசீமியாவுக்கு என சிறப்பு பிரிவு ஒன்று அன்மையில் துவங்கப்பட்டது. இதில் தலசீமியா பாதிக்கப்பட்ட 23 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.

இது குறித்து டீன் கூறியதாவது:

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் 23 குழந்தைகள் தலசீமியா என்ற ரத்த அணுக்கள் சம்மந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்கிறார்கள். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த அணுக்கள் சராசரி நாட்களை விட முன்கூட்டியே அழியும் தன்மை கொண்டுள்ளது.

எனவே, குழந்தைகள் ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒரு முறை வந்து ரத்தம் ஏற்றி கொள்ள வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ரத்த அணுக்கள் ஏற்றும் நிலை இருக்கிறது. இவர்களை மருத்துவமனையில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்க வைத்து ரத்தம் ஏற்றப்படும். இதற்காக 14 படுக்கைகள் கொண்ட டே கேர் சென்டர் உள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் உதவியுடன் 6 குழந்தைகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகள் நலமுடன் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க