• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தர்ணாவில் ஈடுபட்ட முதியவர்

May 15, 2023 தண்டோரா குழு

நில அபகரிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார், மேலும் அவரை அப்புறப்படுத்த வந்த காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பாளையம் எஸ்எஸ்குளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர், குன்னத்தூர் பகுதியில் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை LGB என்ற தனியார் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு அபகரித்து விட்டதாகவும் இது குறித்து ஆர்டிஓ வில் புகார் தெரிவிக்கப்பட்டு பின்னர் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அந்த நிலம் தனக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்று வரை தனது நிலத்தை அதிகாரிகள் மீட்டுத் தரவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மனு அளித்து விட்டு வெளியில் வந்த அவர் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் பல வருடங்களாக தனது நிலத்தை அதிகாரிகள் மீட்டு தராமல் இழுத்தடித்து வருவதாகவும் இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சித்தலைவர் தனது நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

முன்னதாக தர்ணாவில் ஈடுபட்ட முதியவரை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அப்புறப்படுத்த முயன்ற போது காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க