• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உண்டு உறைவிட சிறப்பு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது

May 16, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியரின் நேரடி அறிவுரையின்படி கோவை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து உண்டு உறைவிட சிறப்பு கோடை கால பயிற்சி முகாம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நாளை முதல் 26ம் தேதி வரை 10 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு பயில உள்ள அரசு, மாநகராட்சி நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். அது சமயம் களப்பயணம் செல்லவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பானை ஓவியம், மணல் சிற்பம், காகித வேலைப்பாடுகள், மெழுகுச் சிற்பம், களிமண் சிற்பம், போன்ற பல்வேறு வகையான கலைகள் சார்ந்த பயிற்சிகளை அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் கலை ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுமதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க