• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போலி முகவரியை பயன்படுத்தி 254 சிம் கார்டுகளை விற்பனை செய்த வாலிபர் கைது

May 19, 2023 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பூங்கா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்( வயது 42). தனியார் நிறுவன ஊழியர். மேலும் இவர் சிம் கார்டுகளை ரோட்டோரத்தில் வைத்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் செந்தில்குமார் போலி முகவரி மற்றும் வேறொருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி 254 சிம்கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

இதனை பார்த்த தொலைதொடர்பு நிறுவனம் இது குறித்து சென்னையில் உள்ள கூடுதல் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இந்த வழக்கு கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் போலி முகவரி மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சிம் கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த செந்தில்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் படிக்க