• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆறுமுக வேலவர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

June 2, 2023 தண்டோரா குழு

கோவை மணியகாரம்பாளையம் ராக்காச்சி கார்டன் பகுதியில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக வேலவர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கோலகலமாக நடைபெற்றது.

கோவை கணபதி, மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில்,திருமண பாக்கியம்,குழந்தை வரம்,மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது.இந்நிலையில்,இக்கோவில் வளாகத்தில் தமிழ் கடவுளாம் ஆறு முக வேலவ பெருமானுக்கு தனி கருவறை அமைக்கப்பட்டு, முருகனுக்கு உகந்த நாளான வைகாசி திங்களன்று திருநெறிய திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருக்குட நீராட்டு பெருவிழாவை முன்னிட்டு 108 தீர்த்த குடங்கள் ஊர்வலம், கவுமார மடாலயம் சிரவை ஆதீன அருட்பணி மன்றத்தினர் முன்னின்று நடத்திய இரண்டு கால வேள்வி வழிபாடு கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக,சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டு,திருக்குடங்கள் கோயிலை வலம் வந்து விமான கலசத்திற்கு எடுத்து சென்று புனித நீர் ஊற்றப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னால் மேயர் செ.ம.வேலுசாமி, முன்னால் எம்.பி.நாகராஜன்,தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் கோவை கணபதி மணியகாரம்பாளையம், ராக்காட்சி கார்டன்,பிருந்தாவன் நகர்,ரங்கா நகர்,எல்.கே.ஜி.நகர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க