• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மருதமலை கோயிலில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்டம்- பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர்

June 3, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்டம் வரைவு தொடர்பான ஆய்வுக்கூட்டம் பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் பேசியதாவது:

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் சோமையம்பாளையம் கிராமத்தில் உள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலுக்கு பெருந்திட்டம் வரைபடம் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இத்திட்டம் ரூ.45 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோயில் சாலைகள் மேம்பாடு, தேவையான அடிப்படை வசதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள், கடைகள், காத்திருப்போர் அறை, மரம்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும், கோயில்களின் சுற்றுப்புறங்களில் சேரும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றவும், சுத்தமான குடிநீர் விநியோகிக்கவும் சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த இந்து சமய அறநிலைங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் துணை கமிஷனர் ஹர்சினி, வருவாய் கோட்டாட்சியர்(வடக்கு) கோவிந்தன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க