• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீவிரவாதிகள் தாக்குதலில் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர்

January 17, 2017 தண்டோரா குழு

எகிப்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர். பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்.

” தென் மேற்கு எகிப்தின் புதிய பள்ளத்தாக்கு கோவேர்நோரடேவில் என்னும் பகுதியில் இருந்து 7௦ கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சார்கா நகர். அங்கு அல் நாக்ப் சோதனை சாவடி உள்ளது.

திங்களன்று காவல்துறையினர் அந்த சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்துக்கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர் 3 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். துப்பாக்கி சண்டையில் தப்பி சென்ற தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுபேற்கவில்லை.” என எகிப்தின் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

2௦11ம் ஆண்டு எகிப்தில் நடந்த புரட்சிக்கு பிறகு குடியரசு தலைவர் ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து எகிப்து நாட்டில் பல தாக்குதல்கள் நடந்தது வருகிறது.

எகிப்தில் முன்னாள் அதிபர் மோர்சி, கடந்த 2௦13ல் பதவியிறக்கம் செய்யப்பட்டதையடுத்து காவல்துறை மற்றும் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க