June 19, 2023
தண்டோரா குழு
கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைகட்டி மத்திய சுற்றுக்குட்பட்ட தூமனூர் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர்.அப்போது ஆனைகட்டி தெற்கு காப்பு காட்டிற்கு வெளியே 300மீட்டர் தொலைவில் அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பது ரோந்து பணியின்போது கண்டறியபட்டது.
இதனை அடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் வனக்கால்நடை மருத்துவ அலுவலரால் அந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
யானைகளுக்குள் சண்டை ஏற்பட்டதா? அல்லது நோய் வாய்பட்டு பெண் யானை இறந்துள்ளதா? என பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை வந்த பிறகே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.