• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி வழங்கிய லைப்ரே அறக்கட்டளை

July 27, 2023 தண்டோரா குழு

லைப்ரே பவுண்டேஷன் சார்பில் ஏழை மாணவர்களின் கல்விக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோவையை மையமாக வைத்து லைப்ரே என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், ஏழை மாணவர்களின் கல்விக்காகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்,கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளி படிப்புக்கு தேவையான நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நவஇந்தியா பகுதியில் உள்ள லைப்ரே அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் லைப்ரே அமைப்பின் இயக்குனர் பாபி பாலச்சந்திரன், ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் ஸ்வாதி ஆகியோர் கலந்து கொண்டு 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் லைப்ரே அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், நிதி உதவி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க