• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மகளிர் நீதிமன்றத்தில் கையில் கத்தியை வைத்து கொண்டு ரகளையில் ஈடுபட்ட நபர்

August 9, 2023 தண்டோரா குழு

கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்குக்காக வந்த நபர் ஒருவர் திடீரென கையில் கத்தியை வைத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில் தற்போது பிரியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.இவர் மீது கடந்த 2021 ம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் விதிக்கப்பட்ட நிலையில்,இன்று மனைவியுடன் நீதிமன்றம் வந்தார். நீதிமன்றத்தில் இவரை கைது செய்ய போலீசார் இருந்ததால்,ஆவேசமடைந்த பஷீர் சிறைக்கு போகமாட்டேன் என கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் மனைவி பிரியாவின் கைப்பையில் இருந்த சிறிய கத்தியை தூக்கிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டார்.இதனையடுத்து காவல் துறையினர் அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து செல்வபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.நீதிமன்ற வளாகத்தில் கத்தியுடன் பஷீர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

மேலும் படிக்க