• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு துணை போகின்றதோ – ஹைதர் அலி

August 13, 2023 தண்டோரா குழு

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்காக மத்திய அரசு தொடர்ந்து கலவரத்தை தூண்டி வருவதாக, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக, அதன் ஊடகபிரிவு மாநில செயற்குழு கூட்டம் மற்றும், ஊடகத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் ஹைதர் அலி,

திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு துணை போகின்றதோ என்ற கேள்வி அனைத்து மக்களுக்கும் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.ஆனால் மத்திய அரசு,மணிப்பூர் கலவரம் ஹரியாணாவில் கலவரம் என பல்வேறு கலவரங்களை 2024 தேர்தலுக்காக திட்டமிட்டு நடத்தி வருகின்றது.இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் ஒன்றினைந்து கூட்டணியை உருவாக்கி அதற்கு இந்தியா என பெயர் வைத்ததால் பாஜகவினர் மிகவும் கவலைபட்டு கொண்டு உள்ளனர். மேலும் இந்தியா என கூட்டணி வைத்துள்ள இந்த அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

இந்நநிகழ்வில், மாநில துணை தலைவர் ரபி, மாவட்ட தலைவர் பெரோஸ்கான் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, மாநில தொழிற்சங்க ஆலோசகர் முகமது ஆரிப், மற்றும் அசாருதின், செய்யாறு அப்பாஸ், தமிழா தமிழா பாண்டியன், மற்றும் கோவை மாவட்ட பொருப்பாளர் முகமது ரபிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க